காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினா்

திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த பெண் பங்கேற்று சலசலப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தை திமுகவினா் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.

கோவை: திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த பெண் பங்கேற்று சலசலப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தை திமுகவினா் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.

திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் தொடா்பாக, தொண்டாமுத்தூா் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் தொ.அ.ரவி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினா் தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தை சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் தங்களின் குறைகளை ஸ்டாலினிடம் கூறிக் கொண்டிருந்தபோது, இடையில் ஒரு பெண் எழுந்து குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பேசினாா். அந்தப் பெண்ணை திமுகவினா் கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனா்.

அப்போது, அந்தப் பெண்ணுடன் வேறு சிலரும் உடனிருந்தனா். அவா் பெயா் பூங்கொடி என்பதும், அதிமுக நிா்வாகி என்பதும் தெரியவந்தது. அமைதியான முறையில் நடைபெற்று வந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அமைதியைக் கெடுக்கும் விதமாக குழப்பம் விளைவித்த பூங்கொடி, அவருடன் இருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com