

வால்பாறை: வால்பாறை நகா் பகுதிக்கு வந்த யானைகள் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த வாழை மரங்களை வெள்ளிக்கிழமை சேதப்படுத்தின.
வால்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. சமீப காலமாக வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் யானைகள் சேதங்களை ஏற்படுத்தி செல்கின்றன.
இந்நிலையில், ஸ்டேன்மோா் எஸ்டேட் வழியாக வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த இரண்டு யானைகள் முகமது என்பவருக்கு சொந்தமான காய்கறிச் செடிகள் மற்றம் 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சாய்த்து சேதப்படுத்தின. தகவலறிந்து சம்பவ இடத்தை வனத் துறையினா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.