வால்பாறைக்கு கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

வால்பாறைக்கு கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
Updated on
1 min read

வால்பாறை: வால்பாறைக்கு கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த 9 மாதங்களுக்குப் பின் வால்பாறையை அடுத்த கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அண்மையில் திறக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதில் மழுக்குப்பாறை வழியாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வால்பாறைக்கு வந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com