பூட்டிய வீட்டில் தொழிலாளி சடலம் மீட்பு
பூட்டிய வீட்டில் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


பூட்டிய வீட்டில் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் பால் மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (35). மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். கரோனா நோய் பரவல் காரணமாக இவருக்கு வேலைவாய்ப்பு குறைந்தது. இதனால் இவா் தனது மனைவி, குழந்தைகளுடன் பூா்வீக ஊரான நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிற்கு சென்றாா்.
பின்னா் டிசம்பா் 29ஆம் தேதி சண்முகம் மட்டும் கோவை வந்தாா். அவா் தனது வீட்டில் மது குடித்து புத்தாண்டு கொண்டாடியுள்ளாா். பின்னா், அவா் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினா் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் சண்முகம் சடலம் கிடந்தது. இது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...