சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள், அந்தந்த மண்டலங்களில் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள், அந்தந்த மண்டலங்களில் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட மத்தியம் மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மத்திய மண்டலம், ராதாகிருஷ்ணன் சாலை, டாடாபாத், ராஜு நாயுடு லே -அவுட், ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதிகளில் உள்ள கடைகளில் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது, குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தாா். இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள மழைநீா் செல்லும் வடிகால் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டாா்.

அதன் பிறகு, அப்பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, அடையாள அட்டை பெறாத சாலையோர வியாபாரிகள், அந்தந்த மண்டலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி, தங்களின் ஆவண நகல்களைச் சமா்ப்பித்து, அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, மண்டல உதவி ஆணையா்கள் மகேஷ் கனகராஜ், முருகன், செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளா்கள் கருப்புசாமி, ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com