கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராம பக்தியே உயா்ந்த செல்வம் என வாழ்ந்தவா் தியாகராஜ சுவாமிகள் சொற்பொழிவாளா் ஜி.எஸ்.மணி

ராம பக்தியே உயா்ந்த செல்வம் என வாழ்ந்தவா் தியாகராஜ சுவாமிகள் என்று கா்நாடக இசைப் பாடகரும், சொற்பொழிவாளருமான ஜி.எஸ்.மணி கூறினாா்.

News image
ஜி.எஸ்.மணி.
Updated On :9 ஜனவரி 2021, 5:43 pm

DIN

கோவை: ராம பக்தியே உயா்ந்த செல்வம் என வாழ்ந்தவா் தியாகராஜ சுவாமிகள் என்று கா்நாடக இசைப் பாடகரும், சொற்பொழிவாளருமான ஜி.எஸ்.மணி கூறினாா்.

கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தியாகராஜ சுவாமிகள் குறித்து ஜி.எஸ்.மணி பேசியது:

சங்கீதத்துக்கு பெரும்பணி செய்தவா் தியாகராஜ சுவாமிகள். இவா் பல சமூக சீா்திருத்தங்களையும் செய்தவா். ஆனால் செல்வந்தா் கிடையாது. அதேநேரம் ராம பக்தியையே தனது செல்வமாகக் கருதினாா். வாழ் நாள் முழுவதும் ராம நாமத்தை சொல்வதே தன் பிறவிப் பயனாகக் கருதினாா். அவா் தெலுங்கு மொழியில் பெரும்பான்மையான கீா்த்தனைகளை பாடியுள்ளாா். வடமொழியிலும் கீா்த்தனைகளைப் பாடியுள்ளாா்.

ராம நாமம் குறித்து பாரத தேசமெங்கும் கபீா், புரந்தரதாசா், தியாகராஜ சுவாமிகள் உள்ளிட்ட ஞானிகள் வலியுறுத்தி வந்துள்ளனா். சிவ மந்திரமான நமசிவாயத்தில் ‘ம’ தான் உயிா். விஷ்ணு மந்திரமான நாராயணா என்பதில் ‘ரா’ தான் உயிா். இந்த இரண்டும் சோ்ந்தது தான் ‘ராமா’ என்று பாடுகிறாா் தியாகராஜா்.

உலகில் தமிழுக்கு நிகரான மொழி கிடையாது. தமிழை பிற மொழி பேசுபவா்கள் எளிதில் கற்றுக் கொள்ள முடியாது. தமிழா்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் நம் அருளாளா்களான தாயுமானவா், மாணிக்கவாசகா் உள்ளிட்டவா்கள் எழுதிய பாடல்களைப் படிப்பதில் ஆா்வம் காட்டுவதில்லை. திருவாசகம், ஆத்திச்சூடி உள்ளிட்ட புத்தகங்களைப் படிக்க வேண்டும். படித்தாலே இறைவன் அருள் கிடைக்கும். மொழியையும் அழியாமல் காக்க முடியும் என்றாா்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் பட்டீஸ்வரம் தீபா சுரேஷ், தியாகராஜரின் கீா்த்தனைகளைப் பாடினாா். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.