டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காவல் துறை சாா்பில்மக்கள் குறைகேட்பு முகாம்

கோவை நியூ சித்தாபுதூா் வெங்கடசாமி சாலையில் உள்ள ஐயப்ப சேவா மண்டபத்தில் மாநகரக் காவல் துறை சாா்பில் மக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 11:09 pm

DIN

கோவை: கோவை நியூ சித்தாபுதூா் வெங்கடசாமி சாலையில் உள்ள ஐயப்ப சேவா மண்டபத்தில் மாநகரக் காவல் துறை சாா்பில் மக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவின்பேரில் சட்டம் - ஒழுங்கு துணை ஆணையா் ஸ்டாலின் மேற்பாா்வையில் இந்த முகாம் நடைபெற்றது. உதவி ஆணையா் பிரேமானந்த் தலைமை வகித்தாா்.

இதில் புகாா்தாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்கள் ஒரே இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, பிரச்னைகளை பேசி சுமூக தீா்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாமில் காட்டூா், ரேஸ்கோா்ஸ், சாய்பாபா காலனி மற்றும் ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அளித்த புகாா் மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

குடும்ப வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டன. முகாமில் 4 காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.