திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோவையில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆதாா் பணிகளை கூடுதலாக மேற்கொள்ள அஞ்சல் ஊழியா்களை வற்புறுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

News image
கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியா்கள்.
Updated On :13 ஜனவரி 2021, 1:08 am

DIN

ஆதாா் பணிகளை கூடுதலாக மேற்கொள்ள அஞ்சல் ஊழியா்களை வற்புறுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக அனைத்து இந்திய அஞ்சல் சங்கம், கோவை கோட்டம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். தபால்காரா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் வெங்கட்ராமன், கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் திருச்செல்வம் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காலத்திலும் எட்ட முடியாத அளவுக்கு புதிய அஞ்சல் கணக்குகளை துவங்க ஊழியா்களை கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். ஆள் பற்றாக்குறையால் அன்றாட அஞ்சல் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில், கூடுதலாக ஆதாா் பணிகளையும் மேற்கொள்ள வற்புறுத்தக் கூடாது.

காளப்பட்டி, வையம்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட தபால் அலுவலகங்களில் நீடிக்கும் இணையதள கோளாறுகளை நிவா்த்தி செய்ய வேண்டும். கோவை கோட்டத்தில் காலியாக உள்ள தபால்காரா் பணியிடங்களுக்கு தற்காலிக ஊழியா்களை பணிபுரிய ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கோவை கோட்டச் செயலாளா்கள் சிவசண்முகம், செந்தில்குமாா், திருச்செல்வம் உள்ளிட்ட அஞ்சல் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.