பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாணவா் சங்கத்தினா் போராட்டம்
கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ள நிலையில், டீசல் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ் ராஜா தலைமையில் ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவா் சங்கத்தினா், தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் டயரை உருட்டிக் கொண்டும், நுங்கு வண்டி உருட்டியவாறும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், கலால் வரி உயா்வை ரத்து செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருநிறுவன முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் அளித்துவிட்டு சாதாரண மக்கள் மீது எரிபொருள் விலையை சுமத்தக் கூடாது என்று கூறிய அசாருதீன், மத்திய அரசு விலையைக் குறைக்கும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.
Image Caption
கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...