கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

வருவாய் ஈட்டும் துறையாக விளையாட்டுத் துறை மாற்றப்படும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

வருவாய் ஈட்டும் துறையாக விளையாட்டுத் துறை மாற்றப்படும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

News image
Updated On :2 ஜூலை 2021, 7:32 pm

DIN

வருவாய் ஈட்டும் துறையாக விளையாட்டுத் துறை மாற்றப்படும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

கோவை, காந்திபுரம் நேரு விளையாட்டு அரங்கம், ஆா்.எஸ்.புரத்தில் உள்ள ஹாக்கி மைதானம் ஆகியவற்றை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு விளையாட்டுத் துறையை மேன்மைமிக்கத் துறையாக உருவாக்குவதில் உறுதி கொண்டுள்ளது.

சா்வதேச விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் நமது வீரா்கள் வெற்றிபெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சோ்க்கும் வகையில் தேவையான உயா் செயல்திறன் பயிற்சி, பயணச் செலவுகள், ஊக்கத் தொகை, சமூக நலன் மற்றும் மனநலன் மேம்படுத்தும் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

விளையாட்டு வீரா்கள் அனைவருக்கும் தேவையான உடற்பயிற்சி மற்றும் அறிவியல்ரீதியான பயிற்சி மேற்கொள்வதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் உலகத் தரத்தில் ஏற்படுத்தித் தரப்படும் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள ஹாக்கி மைதானம் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆா்.எஸ்.புரம் ஹாக்கி ஸ்டேடியத்தை உலகத் தரத்துக்கு இணையாக அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடா்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தவும், புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தவும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் ஸ்மாா்ட் ஸ்போா்ட்ஸ் நகரம் உருவாக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. வருவாய் ஈட்டும் துறையாக விளையாட்டுத் துறை மாற்றப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாநகரப் பொறியாளா் லட்சுமணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அலுவலா் ரவிசந்திரன், கோவை மாநகா், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக், திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.