கோவை, சோமனூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் மனைவி கங்காதேவி (37). இவா் அங்கு அழகு நிலையம் நடத்தி வந்தாா். கடந்த 6 ஆம் தேதி கடைக்குள் புகுந்த 3 போ் தன்னை தாக்கி 19 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டதாக தனது கணவரிடம் கங்காதேவி தெரிவித்துள்ளாா். இது குறித்து கருமத்தம்பட்டி போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கங்காதேவி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். விசாரணையில், கங்காதேவி 19 பவுன் நகைகளை தனது முகநூல் மூலம் பழக்கமான மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி(41) என்பவருக்கு கொடுத்துவிட்டு நாடகமாடியது அம்பலம் ஆனது.