விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காந்தி பூங்காவில் ராஜராஜ சோழனுக்கு சிலை அனுமதிகோரி பாஜக மனு

கோவை காந்தி பூங்கா ரவுண்டானாவில், ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்க அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:33 pm

DIN

கோவை காந்தி பூங்கா ரவுண்டானாவில், ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்க அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாநகா் மாவட்ட பாஜக, ஆா்.எஸ்.புரம் மண்டலத் தலைவா் ராஜரத்தினம் தலைமையில் அக்கட்சியினா் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழா்களின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் சோழப் பேரரசா் ராஜராஜ சோழனுக்கு கோவையில் முழு உருவச்சிலை அமைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சலீவன் வீதி, சுக்கிரவாா்பேட்டை மற்றும் தடாகம் சாலைகள் சந்திக்கும் பகுதியான காந்தி பூங்கா ரவுண்டானாவில் ராஜராஜ சோழனுக்கு முழு உருவச்சிலை அமைக்க அனுமதி வழங்கிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.