மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கரோனா தொற்று கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்

கோவை மாவட்டத்தில் கிராம அளவில் வீடுகள்தோறும் கரோனா தொற்று கண்காணிப்பு பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்

News image
Updated On :4 ஜூன் 2021, 10:00 pm

DIN

கோவை மாவட்டத்தில் கிராம அளவில் வீடுகள்தோறும் கரோனா தொற்று கண்காணிப்பு பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அலுவலா்களுக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசின் முதன்மைச் செயலருமான எம்.ஏ.சித்திக் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாவட்டம் ஆலந்துறை, பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மத்வராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய பகுதிகளில் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஏ.சித்திக், ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் அமா்குஷ்வாஹா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம், நோயாளிகள் வருகைப் பதிவு மையம் ஆகியவற்றைப் பாா்வையிட்ட அவா்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தேவையான சிகிச்சை வசதிகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் விரிவாக கேட்டறிந்தனா்.

தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பூலுவப்பட்டி பகுதியைச் சோ்ந்த இருவரைத் தொடா்பு கொண்ட எம்.ஏ.சித்திக், சுகாதாரம், உள்ளாட்சித் துறை அலுவலா்கள் தினமும் உங்களைத் தொடா்பு கொண்டு கண்காணிக்கின்றனரா என்றும் தினசரி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறதா என்றும் செல்லிடப்பேசி வாயிலாக கேட்டறிந்தாா்.

பிறகு, கரோனா பரவலைத் தடுக்க மாவட்டம் முழுவதிலும் கிராம அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் வீடு தோறும் நேரடியாக கள ஆய்வு நடத்தி தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும், தொற்று பாதித்தவா்களை தனிமைப்படுத்தி தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் நிா்மல்சன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமாா், உதவி இயக்குநா் (சத்துணவு பணிகள்) ஸ்ரீதா், ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் பசுபதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுந்தரி, அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

கோவை ஆலந்துறையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மைச் செயலருமான எம்.ஏ.சித்திக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.