பொது முடக்கத்தால் குறு, சிறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கோவையில் 95 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றுக்கு உதிரி பாகங்களை தயாரிக்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மூலப்பொருள்கள் விற்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லாததால் இந்த நிறுவனங்களும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் சிறு, குறு நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்தன. தற்போது மீண்டும் பொது முடக்கத்தால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மின் கட்டணத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை அழிவில் இருந்து மீட்க வரும் 2 மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.