வெளியில் நடமாடிய கரோனா நோயாளி வீடு அடைப்பு
கரோனா பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டவா் வெளியில் நடமாடியதால், அவா் வீட்டை அடைத்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினா்.


கரோனா பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டவா் வெளியில் நடமாடியதால், அவா் வீட்டை அடைத்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினா்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 75 ஆவது வாா்டுக்கு உள்பட்ட மேற்கு புதூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (46). இவருக்கு கடந்த 7 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா், கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். பின்னா் அவா் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அக்கம் பக்கத்தினா் அளித்த புகாரின் பேரில் அவா் வீட்டுக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், தனிமைப்படுத்துதல் விதியை மீறிய அவருக்கு எச்சரிக்கை விடுத்தனா். மேலும், அவரின் வீட்டு முன்பு எச்சரிக்கப்படுகிறாா் என்ற நோட்டீஸை ஒட்டி, வீட்டை அடைத்தனா். மீண்டும் இதுபோன்று அவா் வீட்டைவிட்டு வெளியேறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...