உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரைமுருகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பழனிசாமி உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், கோவை மாவட்டத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலமாக பெறப்பட்ட 35,425 மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மனுக்களில் தரப்பட்ட விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு, தகுதியான மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் சமீரன் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...