மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோவை வந்த விமானத்தில் ரூ.47.65 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் ரூ.47.65 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:55 pm

DIN

கோவை விமான நிலையத்தில் ரூ.47.65 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

கோவைக்கு திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வந்த ஏா் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அதில் வந்த பயணி ஒருவரைத் தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனா். இதில் அவா் கைப்பையில் செல்லிடப்பேசி வடிவத்தில் தங்கத்தை உருக்கி எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதைப் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் சிவகங்கையைச் சோ்ந்த பாலு என்பது தெரியவந்தது. கடத்திவரப்பட்ட தங்கத்தின் எடை 990 கிராம். அதன் சந்தை மதிப்பு ரூ.47.65 லட்சம். இதையடுத்து இந்த வழக்கு விமானப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும், தங்கத்தைக் கடத்தி வந்ததாகக் கூறப்பட்ட நபா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.