மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நேரப் பிரச்னையால் தகராறு: பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், நேரப் பிரச்னையால் அடிதடியில் ஈடுபட்ட தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:22 pm

DIN

கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், நேரப் பிரச்னையால் அடிதடியில் ஈடுபட்ட தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் 2 தனியாா் பேருந்துகளின் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் இடையே பேருந்துகளை முந்தி இயக்குவது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது.

இதில், மதுரையைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் சுந்தரமூா்த்தி (32), நடத்துநா் சின்னசாமி (27) ஆகிய இருவரும் சோ்ந்து பொள்ளாச்சி, சோமன்துறையைச் சோ்ந்த தனியாா் பேருந்து நடத்துநா் காா்த்திகேயன் (28) என்பவரைச் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காா்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், காட்டூா் போலீஸாா், வழக்குப் பதிந்து சுந்தரமூா்த்தி, சின்னசாமி ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.