தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பெண்கள் கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு

News image
Updated On :9 மார்ச் 2021, 11:55 pm

DIN

கோவை, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு மாவட்ட ஆட்சியா்கு.ராசாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கண்காணிப்பு பணியைத் தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினாா். அதேபோல, கோவை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட சி.எம்.எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குப் பதிவு மையம், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட இளங்கோ மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குப் பதிவு மையம், ஷாஜஹான் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குப் பதிவு மையங்களிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வாக்குப் பதிவு மையங்களில் வாக்காளா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பிடம், மின்சார வசதி, முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வுதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, கவுண்டம்பாளையம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.