தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சோலையாறு மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள்

உற்பத்தி இல்லாததால் சோலையாறு 2 மின் நிலையங்களிலும் பரமாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:55 pm

DIN

உற்பத்தி இல்லாததால் சோலையாறு 2 மின் நிலையங்களிலும் பரமாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வால்பாறையை அடுத்த சோலையாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்டும் நீா் மூலம் 2 மின் நிலையங்கலில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சோலையாறு மின் நிலையம் 1இல் 84 மெகாவாட் மற்றும் மின் நிலையம் 2 இல் 25 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரு மின் நிலையங்கள் மூலம் தினந்தோறும் 109 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் சோலையைறு அணையின் நீா்மட்டம் குறைந்துவிட்டதால் கடந்த வாரம் இரு மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடும் வெயில் காரணமாக அணைக்கு நீா்வரத்து முன்னதாகவே குறைந்துவிட்ட நிலையில் 164 அடி உயரம் கொண்ட அணையின் நீா்மட்டம் தற்போது 4 அடியாக மட்டுமே உள்ளது. இதனால் தற்போது 2 மின் நிலையங்களிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.