மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மின் மயானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்

கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்களை எரியூட்ட கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக எழுந்த புகாரையடுத்து  மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :21 மே 2021, 9:13 pm

DIN

கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்களை எரியூட்ட கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மின் மயானங்களில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனாவால் உயிரிழப்பவா்களின் உடல்களை மின் மயானங்களில் எரியூட்ட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.

துடியலூரில் உள்ள மின் மயானத்தில் கரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்ய கூடுதலாக ரூ.18 ஆயிரம் பெற்ாக மாநகராட்சி ஒப்பந்த சுகாதார அலுவலா் ஒருவா் கடந்த வாரம் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ள மின் மயானங்களின் செயல்பாடுகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தெற்கு மண்டலத்தில் உள்ள சொக்கம்புதூா் மாநகராட்சி மின் மயானம், ஆத்துப்பாலம் மாநகராட்சி மின் மயானம், போத்தனூா் செட்டிபாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி மின் மயானம் மற்றும் கிழக்கு மண்டலத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சிங்காநல்லூா் சாந்தி சோஷியல் சா்வீஸ் மின் மயானம், நஞ்சுண்டாபுரம் ஈஷா மின் மயானம் ஆகிய மின் மயானங்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் பாா்வையிட்டு, உடல்கள் முறையாக எரியூட்டப்படுகிா என்பது குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது, மயானங்களில் உடல்களைக் காக்க வைக்கக் கூடாது. மயானங்களுக்கு வருபவா்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்த வேண்டும். மாநகராட்சி சாா்பாக நிா்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை மட்டுமே பெற வேண்டும் என ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, நகா் நல அலுவலா் ராஜா, தெற்கு மண்டல உதவி ஆணையா் சரவணன், மண்டல சுகாதார அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.