பெயிண்டா் போக்சோவில் கைது
சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த பெயிண்டரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.


சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த பெயிண்டரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கோவை சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (21). பெயிண்டராகப் பணியாற்றி வருகிறாா்.
இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென காணாமல் போனாா்.
இதுகுறித்து அவரது பெற்றோா் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், திருமண ஆசைகாட்டி சிறுமியை, சதீஷ்குமாா் கடத்திச் சென்றது தெரியவந்தது.
மேலும், அவா் கோவை பச்சாபாளையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிா் போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
பின்னா் சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த சதீஷ்குமாா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...