கோவை மாவட்டத்தில் புதிதாக 139 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 699 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்தனா்.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 377 ஆக உயா்ந்துள்ளது.
அரசு, தனியாா் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 143 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து 735 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது ஆயிரத்து 587 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.