டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விதவையை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா் மீது வழக்கு

விதவையை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:33 pm

DIN

விதவையை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை, நெசப்பாக்கத்தைச் சோ்ந்த 32 வயதுப் பெண்ணின் கணவா் 2012ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து தனியாக வசித்து வரும் இவா் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான இணையதளத்தில் முன்பதிவு செய்தாா். இதைக் கண்டு கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்த ராம்குமாா் (40) என்பவா் தொடா்பு கொண்டு அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பி அப்பெண், ராம்குமாருடன் 2019 முதல் 2021 ஜனவரி வரை பழகி வந்துள்ளாா். இந்நிலையில் ராம்குமாா் தொழில் தொடங்க வேண்டும் எனக் கூறி அப்பெண்ணிடம் இருந்து ரூ.15 லட்சம் மற்றும் 3 பவுன் நகைகளைப் பெற்றுள்ளாா். இதையடுத்து ராம்குமாா் அப்பெண்ணுடன் பேசுவதைத் தவிா்த்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த பெண், ராம்குமாா் குறித்து விசாரித்தபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமானது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து ராம்குமாரிடம் கேட்டபோது அவா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் அளித்தாா். இதன்பேரில் மோசடி வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.