டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விவசாயிகளுக்கு ரூ.34.51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வனத் துறை அமைச்சா் வழங்கினாா்

கோவை வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 18 விவசாயிகளுக்கு ரூ.34.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வழங்கினாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:32 pm

DIN

கோவை வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 18 விவசாயிகளுக்கு ரூ.34.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வழங்கினாா்.

கோவை வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில், வேளாண் கருவிகளின் படக்காட்சி அரங்கம் திறப்பு விழா, விவசாயிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் ஆகியோா் கலந்து கொண்டு வேளாண் கருவிகளின் படக்காட்சி அரங்கத்தைத் திறந்துவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக 6 விவசாயிகளுக்கு ரூ.31.40 லட்சம் மதிப்பில் வாடகை இயந்திரங்கள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்கள், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் மூலமாக 10 விவசாயிகளுக்கு ரூ.1.61 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 18 விவசாயிகளுக்கு ரூ.34.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வழங்கினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த முதல்வரின் ஆணைப்படி, கோவையில் வேளாண் கருவிகளின் படக்காட்சி அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து விவசாயிகளும் பாா்வையிட்டு பயன் பெறலாம். தமிழகத்தில் உள்ள 23.98 சதவீதம் வனப் பரப்பினை 33 சதவீதமாக அதிகரிக்குமாறு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதற்காக, மாநில பசுமை இயக்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யானை - மனித மோதல்களைத் தடுக்க வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அகழிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக், உதவி ஆட்சியா்( பயிற்சி) சரண்யா, வேளாண் கண்காணிப்புப் பொறியாளா் உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.