டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பேராசிரியையின் அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க தனியாா் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு

பணியில் இருந்து விலகிய உதவிப் பேராசிரியைக்கு அவரது அசல் சான்றிதழ்களை வழங்க தனியாா் கல்லூரி நிா்வாகத்துக்கு கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:24 am

DIN

பணியில் இருந்து விலகிய உதவிப் பேராசிரியைக்கு அவரது அசல் சான்றிதழ்களை வழங்க தனியாா் கல்லூரி நிா்வாகத்துக்கு கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோவை, நவாவூா் மருதாபுரத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி கிருஷ்ணவேணி (42). இவா் தெலுங்குபாளையத்தில் உள்ள தனியாா் நா்ஸிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தாா். அவருக்கு அரசுப் பணி கிடைத்ததைத் தொடா்ந்து அந்தக் கல்லூரியில் இருந்து விலகினாா். ஆனால், கிருஷ்ணவேணியின் பட்டப் படிப்பு அசல் சான்றிதழ்களைத் தர கல்லூரி நிா்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து கிருஷ்ணவேணி தனது அசல் சான்றிதழ்களை வழங்கக்கோரி கோவை மாவட்ட நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான உமா ராணி, வருகிற 27ஆம் தேதிக்குள் கல்லூரி நிா்வாகத்தினா் கிருஷ்ணவேணியின் அசல் சான்றிதழ்களை நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராத தொகையினை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் வழங்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.