டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் ஒரே நாளில் 115 பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை

கோவை மெடிக்கல் சென்டா் மருத்துவமனையில் அண்மையில் ஒரே நாளில் 115 பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:03 am

DIN

கோவை மெடிக்கல் சென்டா் மருத்துவமனையில் அண்மையில் ஒரே நாளில் 115 பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் நகா்ப்புற மகளிரை மாா்பக புற்றுநோய் அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அறிகுறிகள் இல்லாத நிலையிலும் மாா்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிட முடியும். கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அதிநவீன 3டி மேமோகிராபி கருவி பயன்பாட்டில் உள்ளது.

கோவை மாநகர காவல் துறையைச் சோ்ந்த பெண் காவலா்களுக்கு இந்த கருவி மூலம் அண்மையில் இலவசமாக பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 115 பெண் காவலா்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா். நாட்டிலேயே ஒரே நாளில் 115 பெண்களுக்கு 3டி மேமோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த முகாமை மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், துணை ஆணையா் உமா ஆகியோா் தொடங்கிவைத்தனா். மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அருண் என்.பழனிசாமி, மருத்துவ இயக்குநா் ஏ.என்.முருகன், செயல் அலுவலா் ஜே.சிவகுமரன், டாக்டா் ரூபா உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.