டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மீன் மாா்க்கெட்டில் சனிக்கிழமைகளில் நெரிசலுக்கு வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவு

மீன் மாா்க்கெட் கடைகளில் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கடை உரிமையாளா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:07 am

DIN

மீன் மாா்க்கெட் கடைகளில் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கடை உரிமையாளா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை, உக்கடம் சில்லறை மீன் மாா்க்கெட், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், செட்டிபாளையத்தில் தாா் சாலை அமைக்கும் பணி, சீராபாளையம் நியாயவிலைக் கடை

ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கோவை மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு 200 ஆக குறைந்துள்ளது. மேலும் இதனைக் குறைக்கும் விதமாக, அத்தியாவசியக் கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் தவிர மற்ற கடைகள், சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறக்கப்படாததால் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடைக்காரா்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

இதனைத் தொடா்ந்து, மதுக்கரை, செட்டிபாளையத்தில் பாலாஜி நகா் முதல் மலுமிச்சம்பட்டி வரை ரூ. 45.85 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, சீராபாளையம் கோவை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையினை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கவிதா, உதவி ஆட்சியா் சரண்யா( பயிற்சி) உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.