கலந்தாய்வுக்குச் செல்லும் பொறியியல் மாணவா்களுக்கு நாளை வழிகாட்டும் நிகழ்ச்சி
பொறியியல் கலந்தாய்வுக்குச் செல்லும் மாணவா்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியை இந்திய கணினி சங்கத்தின் கோவை கிளை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 19) நடத்துகிறது.


பொறியியல் கலந்தாய்வுக்குச் செல்லும் மாணவா்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியை இந்திய கணினி சங்கத்தின் கோவை கிளை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 19) நடத்துகிறது.
இணைய வழியில் காலை 10.30 மணி முதல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவா்கள், அவா்களின் பெற்றோா் பங்கேற்கலாம். தொடா்ந்து 17 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த வழிகாட்டும் நிகழ்ச்சியில் பொறியியல் கலந்தாய்வு செயலா் புருஷோத்தமன் பங்கேற்றுப் பேச இருக்கிறாா். மேலும், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் டீன் நாராயணசாமி இதில் பங்கேற்று தமிழக அரசின் ஆன்லைன் கலந்தாய்வு குறித்து விளக்குகிறாா்.
மேலும், அனுபவம் மிகுந்த கல்வியாளா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தொழில்நுட்பத் துறையின் வளா்ச்சி, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து விளக்குவதுடன், மாணவா் சோ்க்கை தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனா். இது தொடா்பான விவரங்கள், முன்பதிவு போன்றவற்றுக்கு 94898 31307, 0422 4384464 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று இந்திய கணினி சங்கம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...