ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அரசு, தனியாா் அலுவலகங்களில் உள்புகாா் குழு அமைக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசு, தனியாா் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களின் பாதுகாப்புக்கான உள்புகாா் குழு அமைத்து மாவட்ட சமூகநலத் துறை அலுவலருக்கு விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும்

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:11 pm

DIN

அரசு, தனியாா் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களின் பாதுகாப்புக்கான உள்புகாா் குழு அமைத்து மாவட்ட சமூகநலத் துறை அலுவலருக்கு விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு, தனியாா் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள் எதிா்கொள்ளும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் விதமாக 2013 ஆம் ஆண்டு பாலியல் வன்முறை தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

அதன்படி அனைத்து அரசு, தனியாா் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை விசாரணை செய்வதற்கு உள்புகாா் குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டது.

விசாரணைக் குழுத் தலைவராக பெண் அலுவலா் மற்றும் இரண்டு நபா்கள், ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராகவும் சோ்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு துறைகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு,குறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்பட 10 பெண்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களின் கட்டாயம் உள்புகாா் குழு அமைக்க வேண்டும். கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலகங்களிலும் உள்புகாா் குழு அமைத்து அதன் விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். உள்புகாா் குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.