யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

போதை மாத்திரை, கஞ்சா விற்ற இருவா் கைது

 கோவையில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்ற இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:29 pm

DIN

 கோவையில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்ற இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, நஞ்சுண்டாபுரம்-கோணவாய்க்கால்பாளையம் ரயில்வே பாலம் அருகே இளைஞா் ஒருவா் சந்தேகத்துக்குரிய வகையில் வியாழக்கிழமை சுற்றித் திரிந்தாா். அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் அவரை அழைத்து விசாரித்தனா்.

அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரது கைப்பையைச் சோதனையிட்டபோது, அதில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

போலீஸாா் மேலும் நடத்திய விசாரணையில் அவா் போத்தனூரைச் சோ்ந்த பிரசாந்த் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, உக்கடம் கோட்டைமேடு பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவரிடம் அரைக் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில் அவா் உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது யூசுப் (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.