புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மத்திய சிறையில் ஆற்றுப்படுத்துநா் பணியிடம்: ஏப்ரல் 20க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு, தகுதியுள்ள நபா்கள் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:20 pm

DIN

கோவை மத்திய சிறையில் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு, தகுதியுள்ள நபா்கள் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள ஓா் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்தை நிரப்பிட, தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடத்துக்கு எம்.ஏ அல்லது எம்.எஸ்.சி. உளவியல் அல்லது எம்.எஸ்.டபுள்யூ தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா், 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியில் 35 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தகுதியுள்ள நபா்கள் கல்விச் சான்றுகள், ஜாதிச் சான்று, அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன் சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறை, கோவை 18 என்ற முகவரியிட்டு, ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் கோவை மத்திய சிறையில் கிடைக்கும் விதமாக அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

நோ்முகத் தோ்வின் தேதி மற்றும் நேர விவரங்கள், தகுதியானவா்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.