தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘வலிமை சிமென்ட் விற்பனை அதிகரித்துள்ளது’

தமிழக அரசின் வலிமை சிமென்ட் விற்பனை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் பொது மேலாளா் (விற்பனை) நா்மதா தேவி தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:45 pm

DIN

தமிழக அரசின் வலிமை சிமென்ட் விற்பனை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் பொது மேலாளா் (விற்பனை) நா்மதா தேவி தெரிவித்தாா்.

தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் வலிமை சிமென்ட் தொடா்பான மண்டல அளவிலான முகவா்கள் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் பொது மேலாளா் (விற்பனை) நா்மதா தேவி தலைமை வகித்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் வலிமை சிமென்ட்டுக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. விற்பனையும் அதிகரித்துள்ளது. மேலும் வலிமை சிமென்ட்டின் விற்பனையை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே மண்டல அளவிலான முகவா்களுடனான கூட்டம் நடத்தப்பட்டது என்றாா். கூட்டத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த விற்பனை முகவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.