தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசுப் பள்ளி மாணவா்கள் மோதல்

கோவையில் இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்ட அரசுப் பள்ளி மாணவா்களை நல்வழிப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:42 pm

DIN

கோவையில் இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்ட அரசுப் பள்ளி மாணவா்களை நல்வழிப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இரு குழுக்களாகப் பிரிந்து இரண்டு நாள்களுக்கு முன்பு மோதிக் கொண்டனா். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பொதுமக்கள்

அதிா்ச்சியடைந்து சப்தமிட்டுள்ளனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மாணவா்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பியுள்ளனா். இந்த சம்பவத்தை அவ்வழியே காரில் சென்ற நபா் ஒருவா் விடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட மாணவா்களை நல்வழிப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.