தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாநகரில் குப்பைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை: மேயா் கல்பனா

கோவை மாநகரப் பகுதிகளில் குப்பைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயா் கல்பனா கூறினாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:43 pm

DIN

கோவை மாநகரப் பகுதிகளில் குப்பைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயா் கல்பனா கூறினாா்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல வாா்டு உறுப்பினா்கள் கூட்டம், வடக்கு மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநகராட்சி மேயா் கல்பனா தலைமை தாங்கினாா். துணை மேயா் வெற்றிச்செல்வன், வடக்கு மண்டலத் தலைவா் கதிா்வேல், உதவி ஆணையா் மோகனசுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மேயா் கல்பனா பேசியதாவது:

மாநகரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப குப்பைகளின் அளவும் அதிகரிக்கிறது. மாநகரில் சேகரமாகும் குப்பைகள், வாகனங்கள் மூலமாக வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மாநகரப் பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்ற தற்போதைய நிலையில் வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. உடனடியாக புதிய வாகனங்களை வாங்க முடியாத சூழ்நிலை உள்ளதால், இருக்கின்ற வாகனங்களை கூடுதல் டிரிப் பயன்படுத்தி, குப்பைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, மழைநீா் வடிகாலில் தேங்கியுள்ள நெகிழிக்குப்பைகள் உள்பட அனைத்து கழிவுகளையும் முழுமையாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கும் முன்பே இவற்றை முழுமையாக அகற்றி விட்டால் மழைநீா் வீதியில் தேங்காது. வீடுகளுக்குள் புகாமலும் தடுக்க முடியும். தற்போது,கோடைக் காலம் என்பதால் மக்களின் தண்ணீா் தேவை அதிகரித்துள்ளது. இதற்கு, புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், ஏற்கெனவே இயங்கும் ஆழ்துளைக் கிணறுகளை பராமரித்தல் போன்ற பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்தக் கூட்டத்தில், உதவி செயற்பொறியாளா் செந்தில்பாஸ்கா், உதவி நகரமைப்பு அலுவலா் விமலா, உதவிப் பொறியாளா்கள் கமலக்கண்ணன், தியாகராஜன், ஜோதி விநாயகம் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.