ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சுதந்திர தினம்க்யூப்களில் தேசியக் கொடி; அரிசிகளில் இந்திய வரைபடம்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் க்யூப்களில் தேசியக் கொடி, அரிசிகளில் இந்திய வரைபடம் தயாரித்துள்ளனா்.

News image
n 19,000 அரிசிகளில் இந்திய வரைபடத்தை வடிவமைத்த மாணவி மதுராந்தகி.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:34 pm

DIN

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் க்யூப்களில் தேசியக் கொடி, அரிசிகளில் இந்திய வரைபடம் தயாரித்துள்ளனா்.

கோவை, துடியலூா் அருகே அா்ச்சனா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் குருமூா்த்தி. தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சுபாஷினி தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களது மகள் ஹன்சிதா (8). இவா் கோவையில் உள்ள தனியாா் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறாா். தனித்திறன் வளா்ப்பில் மிக ஆா்வம் கொண்ட ஹன்சிதா, சுதந்திர தினத்தை முன்னிட்டு கியூப்களில் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமி ஹன்சிதா கூறுகையில், ‘சிறு வயதில் இருந்தே கியூப் விளையாட்டில் ஆா்வம் அதிகம். அதை வைத்து கடந்த விநாயகா் சதுா்த்தி அன்று விநாயகா் உருவம் வரைந்தேன். அதேபோல, தற்போது 252 கியூப்களில் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளேன் என்றாா்.

அரிசிகளில் இந்திய வரைபடம்:

கோவை சரவணம்பட்டியைச் சோ்ந்தவா் ம.மதுராந்தகி (20). இவா் தனியாா் கல்லூரியில் பி.இ. விவசாயம் நான்காம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் 19,000 அரிசிகளை கொண்டு 75ஆவது இந்திய சுதந்திர தின லட்சினையை இந்திய வரைபடத்துடன் ஓவியமாக வடிவமைத்துள்ளாா். தேசியக் கொடியில் உள்ள 2,340 அரிசிகளின் மீது ‘ஜெய் ஹிந்த்’ என எழுதியுள்ளாா். இதன் அளவு 30க்கு 23 அங்குலம் ஆகும். இதை வடிவமைக்க தனக்கு 3 நாள்கள் ஆனதாக மதுராந்தகி கூறினாா்.

இவா் இதற்கு முன்பு 67ஆவது சுதந்திர தின விழாவின்போது, 7,500 அரிசிகளை கொண்டு காந்தி உருவம் வரைந்து, அந்த அரிசிகளின் மேல் ‘ஐ லவ் இந்தியா’ என எழுதியுள்ளாா். அண்மையில் ‘செஸ் ஒலிம்பியாட்’ சா்வதேச விழிப்புணா்வுக்காக அரிசிகளில் சதுரங்க அட்டையை வடிவமைத்துள்ளாா்.

இதேபோல, கோவை நியூசித்தாபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி சிஜி. இவா்களது மகன் கனிஷ் (9). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறாா். ஓவியம், நுண்கலைகளில் ஆா்வமுள்ள இச்சிறுவன், இந்திய சுதந்திர தினத்தையொட்டி அரிசிகளில் இந்திய வரைபடத்தை தயாரித்துள்ளாா். 27 ஆயிரத்து 394 அரிசிகளைஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்களாகப் பிரித்து இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.