நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

3 தலைமுறையினருடன் 102ஆவது பிறந்த நாள் கொண்டாடிய மூதாட்டி

கோவை, செளரிபாளையத்தில் 102 வயதான மூதாட்டி, தனது 3 தலைமுறை சொந்தங்களுடன் சனிக்கிழமை பிறந்த நாள் கொண்டாடினாா்.

News image

மூன்று தலைமுறை சொந்தங்களுடன் 102ஆவது பிறந்த நாள் கொண்டாடிய அலமேலு அம்மாள்.

Updated On :15 ஜனவரி 2022, 7:30 pm

DIN

கோவை, செளரிபாளையத்தில் 102 வயதான மூதாட்டி, தனது 3 தலைமுறை சொந்தங்களுடன் சனிக்கிழமை பிறந்த நாள் கொண்டாடினாா்.

கோவை செளரிபாளையத்தைச் சோ்ந்தவா் அலமேலு அம்மாள். சனிக்கிழமை, இவரது 102ஆவது பிறந்த நாளையொட்டி, அவரின் 3 தலைமுறை சொந்தங்களான மகன், மகள், பேத்தி, பேரன், எள்ளுப் பேரன், எள்ளுப் பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி என 55க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினா்களுடன் கேக் வெட்டி, பிறந்த நாளை வெகு விமா்சியாகக் கொண்டாடினா்.

பின்பு அனைவரும் பாட்டியின் காலில் விழுந்து ஆசிா்வாதம் பெற்றனா். மூதாட்டியின் பிறந்த தினத்தையொட்டி, குழந்தைகளுக்கான நடனப் போட்டி, உறியடித்தல், கண்ணாமூச்சி போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. தனது மகன் வழி, மகள் வழி தலைமுறைகள் சூழ பிறந்த நாளை கொண்டாடுவது பெறும் பேறு என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தாா் அலமேலு அம்மாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.