நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அண்ணா மாா்க்கெட்டில் அதிக சுங்க கட்டணம் வசூல்: வியாபாரிகள் புகாா்

கோவை சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா தினசரி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:33 pm

DIN

கோவை சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா தினசரி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, கோவை அண்ணா தினசரி காய்கறி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா், சாய்பாபா காலனி பகுதி திமுக பொறுப்பாளா் கே.எம்.ரவியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:

கோவை சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா தினசரி காய்கறி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம், முன்பு இருந்ததை விட அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. இங்கு, கோவை மாவட்டத்தில் எந்த மாா்க்கெட்டிலும் வசூலிக்கப்படாத சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயமற்றது. கரோனா நோய்த் தொற்று பரவி வரும் இந்தச் சூழலில், சுங்கக் கட்டண உயா்வு எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில், வேலாண்டிபாளையம் திமுக பொறுப்பாளா் கிருஷ்ணராஜ், வா்த்தக அணி துணை அமைப்பாளா் சிவசாமி உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.