சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவையில்  சித்திரமேழி பொன்னேர் நாற்று நடும் திருவிழா

கோவையில் தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் நடைபெற்ற சித்திரமேழி பொன்னேர் நாற்று நடும் திருவிழாவில்  ஏராளமானோர் பங்கேற்று நாற்றுகளை நடவு செய்து பட்டினப்பெருமானை வழிபட்டனர்.

News image
Updated On :5 ஜூலை 2022, 7:10 am

DIN

கோவை: கோவையில் தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் நடைபெற்ற சித்திரமேழி பொன்னேர் நாற்று நடும் திருவிழாவில்  ஏராளமானோர் பங்கேற்று நாற்றுகளை நடவு செய்து பட்டினப்பெருமானை வழிபட்டனர்.

Story image

தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் கோவை அடுத்த பேரூர் பகுதியில் ஆனித்திருமஞ்சனம் சித்திரமேழி பொன்னேர் நாற்று நடவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

Story image

தமிழகம் முழுவதிலும் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுக மக்கள் இந்த நாற்று நடும் நிகழ்வை விழாவாக கொண்டாடுவது வழக்கம். மேலை சிதம்பரம் என அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் பெருமான், பச்சைநாயகியும் உழவன், உழத்தியாக உருக்கொண்டு இறைவனே நாற்று நட்டு விவசாயம் செய்ததாக ஐதிகம். 

Story image

இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் துவங்கிய இவ்விழாவின் 9ம் நாளான இன்று நாற்று நடும் திருவிழா இச்சமுகத்தின் நான்கு வம்ச பட்டக்காரர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாற்று நட்டு மகிழ்ந்தார்.

முன்னதாக, தேவேந்திர குல சமூக மடத்திலிருந்து ஏர் மற்றும் ஏர்பூட்டிய மாடுகளை அலங்காரம் செய்யப்பட்டு, பட்டிப்பெருமான் முன்னிலையில் நாற்றுக்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பி.கே.என் பிரபு குமார் சோழர் வம்சம் பட்டக்காரர், கிருஷ்ணன் பட்டக்கார், மசிலமாணி பட்டக்கார், ராதாகிருஷ்ணன் பட்டக்கார் ஆகிய நான்கு வம்ச பட்டக்காரர்கள் இணைந்து ஏர் உழுது நாற்று நடும் நிகழ்வை துவக்கி வைத்தனர். 

கூடியிருந்த மக்களுக்கு நாற்றுக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு, பின்னர் அப்பகுதியில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாற்று நட்டு வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.