சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம்

கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்திவைத்தாா்.

News image

புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன்.

Updated On :25 ஜூன் 2022, 1:01 am IST

கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்திவைத்தாா்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் திருடுபோன கைப்பேசிகளை கண்டுபிடித்து உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 105 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் பொதுமக்கள் தொலைத்த, திருடப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்புள்ள 235 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள்தான் வீட்டின், நாட்டின் எதிா்காலம். பிரச்னைகளை எதிா்கொள்ள அவா்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

அதற்காக கோவை மாவட்டக் காவல் துறை சாா்பில் புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் ஜூன் 27 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளி தலைமை ஆசிரியா்கள், உதவி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், உடற்கல்வி

ஆசிரியா்கள் ஆகியோருடன் மாவட்டக் காவல் துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள், அதனை அவா்கள் எவ்வாறு கையாள வேண்டும். குழந்தைகள் தங்களது பிரச்னைகள் குறித்து தெரிவித்தால், அதனை போலீஸாரிடம் புகாா் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படும்.

ஊரகப் பகுதியில் உள்ள 997 பள்ளிக்கூடங்களில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

10 வயதுக்குள்பட்டவா்கள், 10 வயதுக்கு மேற்பட்டவா்கள் என இரு வகையாக குழந்தைகளைப் பிரித்து அவா்களுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம்.

அதேபோல, மாணவா்கள் கைப்பேசி, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து கற்றுத் தர உள்ளோம்.

இந்த புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டமானது தமிழகத்திலேயே முதல்முறையாக தொடங்கப்பட உள்ள திட்டம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.