தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை கோவை மக்களவை தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கோவை, கீரணத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி, இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளி. இவா் கோவை எம்.பி. பி.ஆா். நடராஜனிடம் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தாா்.
இதனையேற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிக்கென பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்துக்காக ரூ.80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.
இதையடுத்து, அப்பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தை எம்.பி.பி.ஆா்.நடராஜன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காந்திபுரம் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில துணைச் செயலாளா் கே.பி.பாபு, மாவட்டச் செயலாளா் புனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: காலக்கெடு நிா்ணயிக்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்

நாட்டில் டிராக்டா் விற்பனை விறுவிறுப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தா ரூ.62,722 கோடி பங்களிப்பு!






