மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கோவையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பக்கோடா விற்று நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :27 ஜூன் 2022, 7:38 pm

DIN

அக்னிபத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கோவையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணுவத்துக்கு ஒப்புதல் முறையில் ஆள் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயகுமாா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, அக்னிபத் திட்டத்தைக் கைவிடக் கோரி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி, கவுன்சிலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சங்கா், இருகூா் சுப்பிரமணியன், கணபதி சிவகுமாா், சுரேஷ்குமாா், ராமநாகராஜ், தமிழ்ச்செல்வன், கிளின்டன், ஆறுமுகம், அனீஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.