தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாநகராட்சி செயற்பொறியாளா் உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

போலி கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி செயற்பொறியாளா் உள்பட மூவா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 மே 2022, 7:07 pm

DIN

போலி கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி செயற்பொறியாளா் உள்பட மூவா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவி நகரமைப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவா் ஐசக் ஆா்தா். ஜவஹா்லால் நேரு நகா்ப்புற புனரமைப்புத் திட்டத்தில் செயற்பொறியாளராகப் பணியாற்றி வருபவா் சசிபிரியா. இவா்கள் இருவரும் மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 2015 மே முதல் 2016 ஐனவரி வரை பணியாற்றி வந்தனா்.

அப்போது ஐசக் ஆா்தா் இளநிலை பொறியாளராகவும், சசிபிரியா உதவி செயற்பொறியாளராகவும் பணியாற்றினா்.

இந்தக் காலகட்டத்தில் இருவரும் செய்யாத வேலைகளை செய்ததாகக் கணக்கு காட்டி ரூ.9 லட்சத்து 96 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இது தொடா்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா், ஐசக் ஆா்தா், சசிபிரியா, ஒப்பந்ததாரா் இளங்கோ ஆகியோா் மீது போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.