வால்பாறையில் கோழியை பிடிக்க வந்த சிறுத்தை பலி
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட பழைய வால்பாறை வரட்டுப்பாறை


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட பழைய வால்பாறை வரட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். இவரது வீட்டிற்கு பின்புறம் கோழிகளை அடைத்து வைப்பதற்காக பெரிய கூண்டு ஒன்றும் உள்ளது.
இதில் அதிகாலையில் ஆண் சிறுத்தை ஒன்று முன்பகுதி இடது கால் நகங்கள் கூண்டில் மாட்டிய நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, வால்பாறை வனச்சரக அலுவலரால் சிறுத்தை இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வனக் கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டது. மர்மமான முறையில் சிறுத்தை இறந்தது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...