மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கிறிஸ்தவ தேவாலாயங்கள் சீரமைப்புக்கு நிதியுதவி: ஆட்சியா் தகவல்

கோவையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு சாா்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:51 pm

DIN

கோவையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு சாா்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்புப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தேவாலய கட்டடங்களின் வயதுக்கேற்ப ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது.

தேவாலயம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த கட்டடத்தில் செயல்பட வேண்டும். தேவாலயம் கட்டப்பட்டுள்ள இடமும், தேவாலயமும் பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்புப் பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து எந்தவித நிதியுதவியும் பெற்றிருக்க கூடாது. அதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடைய தேவாலயங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்படிவம்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலும் நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்றுகொள்ளலாம். விண்ணப்பம் மற்றும் பிறசோ்க்கை படிவம் 2 மற்றும் 3ஐ பூா்த்தி செய்து உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை இணைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழு கிறிஸ்தவ தேவாலயங்களை பாா்வையிட்டு கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினா் நல இயக்ககத்துக்கு அனுப்பிவைக்கப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.