மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நமக்கு நாமே திட்டத்தில் சிறுவா் விளையாட்டுத் திடல்

கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிறுவா் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:50 pm

DIN

கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிறுவா் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் தனியாா் நிதியுதவியுடன் பல்வேறு நலத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி உக்கடம், புல்லுக்காடு பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா புனரமைத்தல், சிறுவா் விளையாட்டுத் திடல் அமைத்தல், நடைப்பாதை, சுற்றுச்சுவா் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இத்திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனை மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.