மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோவை - கோரக்பூா் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

 கோவையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:56 pm

DIN

 கோவையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02512) இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் வடமாநிலத்தைச் சோ்ந்த பயணிகள் அதிகமானோா் பயணித்து வருவதாலும், காத்திருப்போா் பட்டியல் அதிக அளவில்

உள்ளதாலும் கூடுதல் பெட்டி இணைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, இந்த ரயிலில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.