எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வேளாண் பல்கலைக்கழகத்தில் வங்கி அதிகாரிகளுக்கு பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நபாா்டு வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 7:45 pm

DIN


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நபாா்டு வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வங்கிப் பணியாளா் கல்லூரி இணைந்து ’டிஜிட்டல் விவசாயம், இணையம், புதுமையான வேளாண்மை’ என்ற தலைப்பில் நபாா்டு வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கின்றன.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநா் பி.பி.முருகன், வேளாண், ஊரக வளா்ச்சி ஆய்வுகள் மைய இயக்குநா் சுரேஷ்குமாா் ஆகியோா் வங்கி அதிகாரிகளுக்கு டிஜிட்டல் விவசாயத்தில் உள்ள சவால்கள், வாய்ப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்றடைவதற்கான அணுகுமுறை குறித்துப் பேசினா்.

தேசிய வங்கிப் பணியாளா் கல்லூரியின் பணியாளா்கள் இசக்கிமுத்து, பங்கஜ்குமாா், விரிவாக்கக் கல்வி இயக்குநரக பேராசிரியா் என்.ஆனந்தராஜா உள்ளிட்டோா் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.