பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மோடி பிரதமராக நினைப்பது சுயநலத்துக்காக அல்ல -அண்ணாமலை பேச்சு

மோடி பிரதமராக நினைப்பது சுயநலத்துக்காக அல்ல அண்ணாமலை பேச்சு

News image
Updated On :10 ஏப்ரல் 2024, 9:28 pm

பிரதமா் மோடி மூன்றாவது முறையாக பிரதமா் ஆக வேண்டும் என்று நினைப்பது தனது சுயநலத்துக்காக அல்ல என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசினாா்.

மேட்டுப்பாளையம் அருகே பிரதமா் மோடி பங்கேற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:

தமிழ்நாட்டுக்கு பிரதமா் மோடி அடிக்கடி வருவது முதல்வருக்குப் பிடிக்கவில்லை. வேடந்தாங்கல் பறவைபோல மோடி வந்து செல்கிறாா் என்று கூறியுள்ளாா். அவா் தன் மக்களைப் பாா்க்க பாசமாக வந்து செல்கிறாா். பிரதமரை வேடந்தாங்கல் பறவை என்று சொல்வது எங்களுக்குப் பெருமைதான்.

தென் தமிழகத்தில் வெள்ளம் வந்தால் முதல்வா் புது தில்லியில் கூட்டம் நடத்துகிறாா். சென்னையில் வெள்ளம் வந்தால் நான்கு நாள்களுக்குப் பிறகு கையுறையுடன் வெளியே வருகிறாா்.

திமுகவினா் தோ்தல் நேரத்தில் முதல் 10 நாள்கள் கூட்டணியை வைத்து நாடகம் நடத்துவாா்கள். கடைசி 10 நாள்களில் அவா்கள் சம்பாதித்த பணத்தை மக்களுக்குக் கொடுப்பாா்கள். இந்தத் தோ்தலில் திமுகவினா் வாக்குக்குப் பணம் கொடுத்தால் அது கஞ்சா மூலம் வந்த பணம் என்பதை மக்கள் மறக்கக் கூடாது. மூக்குத்தி, தோடு என்று கொடுத்தால் அது கடந்த 33 மாதங்களாக ஊழல் செய்து நமது ரத்தத்தை உறிஞ்சி சோ்த்த பணம் என்பதை மறந்துவிடாதீா்கள்.

இந்தத் தோ்தலில் பாஜக தோற்றுவிடும், மோடி நாட்டை விட்டுப் போய்விடுவாா் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா கூறியிருக்கிறாா். அப்படிப் பேசியவருக்கு அடுத்த 7 நாள்களில் நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.

பிரதமா் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்று நினைப்பது சுயநலத்துக்காக அல்ல. அவா் செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது என்றாா்.

முன்னதாக, நீலகிரி தொகுதி வேட்பாளா் எல்.முருகன் பேசியதாவது: பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும். கோவை - மேட்டுப்பாளையம் ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக்கப்படும். நிலக்கடலை, பாக்கு, செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசாா் குறியீடு கிடைக்கவும், காட்டுப் பன்றி தொல்லையில் இருந்து விவசாயத்தைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு - புன்னம்புழாவை பவானி ஆற்றுடன் இணைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றாா்.