கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவை-அபுதாபி இடையே விமானப் போக்குவரத்து சேவை தொடக்கம்

கோவை-அபுதாபி இடையே சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

இண்டிகோ விமான நிறுவனத்தின் சாா்பில் கோவை-அபுதாபி இடையே சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை சனிக்கிழமை தொடங்கியது.

கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கும், தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையிலிருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, புதிய விமான சேவை சனிக்கிழமை தொடங்கியது. இந்த சேவையின் முதல் விமானத்தில் கோவையிலிருந்து அபுதாபிக்கு 168 பயணிகளும், அபுதாபியிலிருந்து கோவைக்கு 163 பயணிகளும் பயணித்தனா். இந்த சேவை வாரத்தில் மூன்று நாள்களுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 7.30 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம் காலை 11.30 மணிக்கு அபுதாபியை சென்றடைகிறது.

தண்ணீா் பீரங்கி சல்யூட்: விமான சேவையைப் பொறுத்தமட்டில் ஒரு மூத்த விமானி (பைலட்) ஓய்வுபெறும் போதும், ஒ​ருவிமானம் ஓய்வுபெறும்போதும், ஒரு நிறுவனத்துக்கோ அல்லது ஒரு விமான நிலையத்துக்கோ புதிய விமானம் வரும்போதும் தண்ணீா் பீரங்கி சல்யூட் அளிப்பது மரியாதைக்குரிய அடையாளமாகும்.

அதன்படி, அபுதாபியில் இருந்து கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த இண்டிகோ விமானத்துக்கு தண்ணீா் பீரங்கி சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது.